பஞ்சயாத்து கூடுது , நாட்டாமை பேசுறாரு ,
' ஆரா அது பஞ்சயத்த கூட்னது முன்னாலே வாடா ',
" ஐயா நாந்தாயா ப்ராது குடுத்தேன் "
"சொல்றா ,எதுக்கோசரம் ப்ராது குடுத்தே, ஆயி போறப்ப சொம்பு காணாம போயிடிச்சா ?"
"இல்லங்க்யா."
"கதிரு அறுக்குறப்போ அருவா காணாம போயிடிச்சா ?"
"இல்லங்க்யா ."
"அப்புறம் எதுக்கோசரம் பஞ்சாயத்த கூட்ன வாய தொறந்து சொல்லு ."
"ஐயா அடுத்த மாசம் என்ற மவனுக்கு கண்ணாலம் வச்சிருந்தேன் ,அது நடக்காதுங்கயா ."
" வெளக்கமா சொல்றா ."
"சிலுக்கு தெரு சிங்காரத்தோட பொண்ணுக்கு தான்யா என்ற மவன குடுக்கறதா இருந்துச்சி ,இப்போ அந்த பொண்ணு என்ற பையன கட்டிக்க இஷ்டமில்லேன்னு சொல்லுதுயா ."
"என்றா சொல்றே நீ ,குலுக்கிட்டு வரது சீம பசுவாயிருந்தாலும் ,சிலுப்பிட்டு நிக்கறது காங்கேயேன் காளையால்லே இருக்கோணும் ,கூப்புடறா பொண்ணையும்,பையனையும் ."
பொண்ணும்,பையனும் ஆஜர் .நாட்டமை பெண்ணிடம் ,
"என்னம்மினி இவரு சொல்றது நெசமா,அவரு பையன கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டியாமே?'
பெண் அமைதியா இருக்கா ,பெண்ணோட அப்பா பேசுறாரு ,
"அது எப்படிங்கய்யா இம்புட்டு பேருக்கு முன்னாடி வாய தொறந்து பேசும் ,அதுக்கு கூச்சமா இருக்காதா ?'
இடையில் பெண் பேசுகிறாள்
" எனக்கு எதுக்கோசரம் கூச்சம் ,சொல்ல வேண்டியத வெளக்கமா சொல்லிடுறேன் ,அந்த பையனுக்கும் எனக்கும் பரிசம் போட்டப்ப ,நான் Wipro ல இருந்தேன் ,இப்ப எனக்கு Microsoft ல வேல கெடச்சிருக்கு ,மாபிள்ள பையன விட எனக்கு 30,000/- ரூபா சம்பளம் அதிகம் ,என் status கும் அவன் status கும் ஒத்து வராது ."
மாப்பிள்ளை அழுவறான் .
"ஐயா போனவாரம் வரையிலும் Coffee shop ல என் கைய புடிச்சிக்கிட்டு தெனமும் கொஞ்சிட்டு இருந்த பொண்ணு ,இன்னைக்கு இந்த மாதிரி பேசுதுயா."
பெண் பேசுறாள் .
" What nonsense,நான் எப்ப உன்கூட Coffee shop க்கு வந்தேன் ,பொய் சொல்லாதே ?"
நாட்டாம வாய தொறக்குறார்.
"என்றா அந்த பொண்ணு உன்கூட Coffee shop க்கு வந்துச்சின்னு சாட்சி இருக்கா ?"
"நான் பாதேன்யா ."
" நீ ஆருக்கு சொந்தம்லே ?"
"பையனோட சித்தப்பாயா ".
"செல்லாது ,செல்லாது ."
"நான் பாத்தேனுங்க ."
" நீ யாருலே ?"
"மாபிள்ளயோட தம்பிங்கயா ?"
"ம்ம்ம்ம் செல்லாது செல்லாது ?"
ஒரு சின்ன பையன் பேசறான் .
"ஐயா நான் பாதேனுங்க்யா ."
"என்ன கண்ணு பாத்தே ?"
" இந்த அக்கா அந்த மாமா கைய புடிச்சி coffee shop க்கு கூட்டிகிட்டு போச்சு ,நான் பொறநாலேயே போயி பாதேன்யா ,ரெண்டு பெரும் coffee ய குடிக்கலையா,ரொம்ப நேரம்மா கைய புடிச்சிக்கிட்டு பேசிகிட்டே இருந்தாங்க ."
" என்றா கண்ணு பேசுனாங்க ".
"இந்த அக்கா மாமாகிட்ட உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ,கண்ணாலம் கட்டிகிட்டா உங்களைதான் கட்டிக்குவேன்னு
சொல்லிச்சியா ,அதுக்கு மாமா சந்தோசமா சிரிச்சாருயா ."
பெண் கத்துகிறாள் .
"பொய் இந்த பையன் பொய் சொல்றான் ."
சிறுவன் தன் cell phone னை எடுக்கிறான்.
"இந்த மாதிரி எதாச்சும் நடக்கும்னுதான்யா நான் எல்லாத்தையும் record பண்ணியிருக்கேன் ."
நாட்டமை cell phone னை வாங்கி பாத்துட்டுயிருக்கிறார் .பெண் தந்தை பேசுறார் .
" ஐயா இப்பெல்லாம் technology ரொம்ப develop ஆயிடிச்சியா ,morphing கீபிங் செஞ்சி ...
நாட்டமை கத்துறார் ,
"நிறுத்தறா .....(நிறுத்தறா ...ருத்றா...தறா...றா.)காலணா சம்பாதிச்சாலும் கக்கூசுக்கு token குடுத்து சம்பாதிச்சவன்டா என்ற பாட்டன் ,என்றா வக்காளி technology,கண்ணாலம்கிறது Coffee shop ல ஆரம்பிச்சி Walmart ல முடியறதுன்னு நெனச்சியா ,மொளைக்கிற நெல்லு பொய் சொல்லும்டா ,சின்ன பையன் கைலயிருக்கிற Cell லு பொய் சொல்லாதுடா .இன்னிக்கு Microsoft ல வேல கெடச்சதுக்கு இந்த பையனோட பொண்டாட்டி ஆகமாட்டேன்னு சொல்றவ ,நாளைக்கு Billgates சோடவெப்பாட்டி ஆகறதுக்கு கட்ன புருஷன் தலையில கள்ளபோடமாட்டான்னு என்றா நிச்சயம் .மானம் பாத்து நிக்கிற பூமிலே நம்ப பூமி ,காத்துல கவுச்சடிச்சாலேயே கை கழுவாம வர்ற கூட்டம்லே இது , technology பத்தி பேசுரானாம் .........
பேச பேச நாட்டாமை ரத்தவாந்தி எடுத்து விழுகிறார் ,கூட்டம் ஓடி வருது.
நாட்டாமை வீட்ல அவங்க பொண்ணு யார்க்கிட்டயோ cell ல பேசிட்டிருக்கு .
" ஒண்ணும் problem இல்லே ரவி ,என்ற அப்பன் வெத்தலையில சுண்ணாம்புக்கு பதிலா வெசத்த தடவிட்டேன் ,அதனால நம்ப marriage ல ஒரு பிரச்சனையும் வராது ."
A Film By,
Mokkapaandi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக