ஞாயிறு, 17 ஜூலை, 2011

வெற்றி நம் கையில்

தோல்வியைக் கண்டுத்,

துவண்டுவிடாதே வாலிபா-

எது தோல்வியென ,

விளக்குவாயா நீ?

வாழ்க்கையின் கண்ணோட்டத்தில்

எதுவுமே தோல்வி இல்லை,

எத்தனையோ எதிர்பார்ப்புகள்,

ஏராளமான ஏமாற்றங்கள்,

ஆனால்,

நீ, நீயாக இருக்கும்வரை

வாழ்க்கையின் ஏமாற்றங்கள்

வெறும் அலையோசை

மட்டுமே...............

ஆர்ப்பரித்தாலும்,

பாறையான உன்

இதயத்தில் பட்டு,

திசைத் தெரியாமல் சிதறிவிடும்.

தடுக்கும் படிகள் எல்லாம்,

உணர்த்தும் பாலங்கள்!

களைந்துவிடு,

உன் இதயத்தை வருத்தும்

விஷ செடிகளைக்

களைந்துவிடு.

வெற்றி விருட்ஷம்மாக

விளைந்துவிடு........

இதயத்தை உறுதிபடுத்து,

வெட்டி பாரத்தை,

வெட்டி எறிந்துவிடு.

தோளின் பாரத்தை உயர்த்து.

பாரத புதல்வனென வலம் வா.

வாழ்கையில் வேட்கைக் கொள்.

வேங்கையாக முன்னேறு.......

வேலையில்லையென இருண்டுவிடாதே,

தட்டியக் கதவெல்லாம் திறக்காது?

கொட்டிய முரசு ஒலிக்காமல் போகாது.

கொட்டுவதற்கு உன்.......

இரு கைகள் இருக்கின்றன,

இரும்பெனக் கொண்டு

உழைத்து வா,

வெற்றி உன் இருக்கையாகிவிடும்.

தொடர்த் தொல்லைகள்

இடர் ஏற்படுத்துவதாய்

எண்ணாதே.......

படமெடுத்து நிற்கும்

உன் நம்பிக்கையின் முன்

அவை,

இடம் தெரியாமல் போகும்.

சுடர் விட்டு ஜொலிக்கும்

ஜோதியாய் தெரிவாய் நீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக