" தவமா பெத்த பையன்
தறுதலையா இருக்கானே "-
உள்ளுக்குள்ள அழுவறான் அப்பன்,
ஊர சுத்த காசு கேட்டு
வெக்கமேயில்லாமே கைய ஆட்டிட்டு நிப்பான்.
ஐயோ..........
உருப்புடவேமாட்டான்னா ,
ஒப்பாரி வெக்கிறா அம்மா.
அதெல்லாம் பாத்தா
இருக்கமுடியுமா சும்மா.
வேலைக்கு போகசொல்லி
கேக்குறாளே அக்கா.......
காதுலையே போட்டுக்காம
போட்டுக்கிறான் கலர் கலரா.....
சொக்கா.
நண்பனோட சம்பளம்,
மாசம் மூணு லட்சம்,
வீணா போன காதுல கேட்டும்
இல்லாம போச்சே கூச்சம்.
வெட்டியா சுத்தறவனுக்கு
வெரைட்டி ரைஸ் கேக்குது,
கட்டி வச்சு அடிக்கனும்னு
மனசுதான் துடிக்குது.
சொல்றத சொல்லிட்டேன்,
காத்துவாயன் பாட்டுக்குள்ளே.
புரியாம சுத்துறாங்க
சில பேரு சிட்டிக்குள்ளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக