புதன், 27 ஜூலை, 2011

எட்டு எட்டா...........

ஒரெட்டு வயது
அது,
ஓடி ஆடும் வயதும்
அது.
ஓயாமல் சுற்றும் காலம்
அது.
பெரியவர் வாயால்
திட்டும் கிடைக்கும்,
பெற்றோர் கையால் 
குட்டும் கிடைக்கும்.
அதற்கெல்லாம் ,
அசைந்ததுமில்லை.
அவர் சொல் கேட்டு,
இசைந்ததுமில்லை.
படிக்காமல் விளையாடி
திரிந்ததும்,
விளையாட்டாய் படித்து
கிடந்ததும்,
காலம் கடந்து
இப்போதும்,
தேனாய் நெஞ்சில்
இனிக்கிறது.

ஈரெட்டு வயது
அது,
பொன்னான தருணங்கள்
பொங்கி வழிந்த
நேரமது.
பொல்லாத தருணமாகி
பொசுங்கி போன
கதையுமது.
பாடம் பிடிக்காது,
பாவம் பிடித்தது.
பாதியில் நிறுத்திய
படிப்பும்,
பாவை ஒருத்தியின்
நடிப்பும்,
எது சரி?
எது தவறு?
அறிய முடியா
தவிப்பை,
கண்மூடி நினைத்தாலும்,
கனலாய் நெஞ்சு
சுடுகிறது.

மூவெட்டு வயது
அது,
முச்சந்தியில்
நிறுத்திய
பருவமது.
நண்பரென்ற பெயரில்
நரிகள் வந்த
சாமம் அது.
கண்ணில் கொண்ட
கவர்ச்சி கண்டு
காதல் கொண்ட
காமம் அது.
காலால் மிதிபட்ட
பின்,
கண்ணீரில் மூழ்கிய
கடலுமது.
ஐயோ
வேண்டவே
வேண்டாம்,
அந்த நினைவுகள்.
அவை இன்னமும்
என்னுள் அழியா
தழும்புகள்.

நான்கெட்டு வயது
அது.
நான் கெட்டு திருந்திய
வயதும் அது.
நம்பிக்கை தந்த
விதையுமது.
தவமாய் கிடந்து
நல்ல மனைவி
வந்ததும்,
வரமாய் இரு
கனியை தந்ததும்,
சாதிக்க வேண்டுமென்ற
வெறி,
தறி கெட்டு
தாவுகிறது.
நல்லது,
கேட்டது,
மாறி மாறி
வருகிறது.
பாதியில் நிறுத்திய
படிப்பை,
அழகாய் சொல்லி
தருகிறது.
அதோ,
எதிர்காலம்
பிரகாசத்துடன்.......
வரவேற்கிறது.
உறுதியான எட்டு
வைத்து,
பாதம் அங்கே
செல்கிறது.

திங்கள், 25 ஜூலை, 2011

முதல் காதல்

மணம் முடிந்தப் பின்னும்,
மனைவியைக்  காதலித்த போதும்,
மகனைத் தாலாட்டிய போதும்,
ஏதேனும் ஒரு வினாடி.......
மனம்,
அவளை நினைக்கத்தான்,
செய்கிறது.

வானம் தந்த
இறகுப் போல்
வந்தவள்,
வந்த அவள்..............
தாங்க முடியா
பாரம் தந்து,
சென்றாள்.

தேவதை அருளிய
சிறகுப் போல் 
வந்தவள்,
வந்த அவள்..............
காதல் தீயில் 
என்னை விறகாக்கிவிட்டு
சென்றாள்.

இதயக்கதவு
அவள் வருகைஎண்ணி
மூடிக்கிடந்தது. 
தாமதமாக
வந்தவள்,
வந்த அவள்............
கல்லறை சாவியை,
திணித்துவிட்டு
அவசரமாக
சென்றாள்.

என்
மலர்ப்பாதை,
அவள் தடம்ப்பட,
தவம்கிடந்தது.
தங்கத் தேரென
வந்தவள்,
வந்த அவள்.............
தேளாய் விஷம் 
கொட்டி,
சட்டென சென்றாள்.

செந்நீறாய்
என் படுக்கையும்,
கண்ணீராய்
அவள் நினைவும்,
காலம் என்னை,
கழுவில்லேற்றியிருந்தது.
வேதனை தந்தாலும்,
வலியை தந்தாலும்,
கண்ணீரை தந்தாலும்,
காலம் கடந்த நினைவை,
நான் வரவேற்கவே செய்கிறேன்.




வியாழன், 21 ஜூலை, 2011

ஒரு ஊர்ல ஒரு நாட்டாமை

பஞ்சயாத்து கூடுது , நாட்டாமை பேசுறாரு ,

' ஆரா அது பஞ்சயத்த கூட்னது முன்னாலே வாடா ',

" ஐயா நாந்தாயா ப்ராது குடுத்தேன் "

"சொல்றா ,எதுக்கோசரம் ப்ராது குடுத்தே, ஆயி போறப்ப சொம்பு காணாம போயிடிச்சா ?"

"இல்லங்க்யா."

"கதிரு அறுக்குறப்போ அருவா காணாம போயிடிச்சா ?"

"இல்லங்க்யா ."

"அப்புறம் எதுக்கோசரம் பஞ்சாயத்த கூட்ன வாய தொறந்து சொல்லு ."

"ஐயா அடுத்த மாசம் என்ற மவனுக்கு கண்ணாலம் வச்சிருந்தேன் ,அது நடக்காதுங்கயா ."

" வெளக்கமா சொல்றா ."

"சிலுக்கு தெரு சிங்காரத்தோட பொண்ணுக்கு தான்யா என்ற மவன குடுக்கறதா இருந்துச்சி ,இப்போ அந்த பொண்ணு என்ற பையன கட்டிக்க இஷ்டமில்லேன்னு சொல்லுதுயா ."

"என்றா சொல்றே நீ ,குலுக்கிட்டு வரது சீம பசுவாயிருந்தாலும் ,சிலுப்பிட்டு நிக்கறது காங்கேயேன் காளையால்லே இருக்கோணும் ,கூப்புடறா பொண்ணையும்,பையனையும் ."

பொண்ணும்,பையனும் ஆஜர் .நாட்டமை பெண்ணிடம் ,

"என்னம்மினி இவரு சொல்றது நெசமா,அவரு பையன கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டியாமே?'

பெண் அமைதியா இருக்கா ,பெண்ணோட அப்பா பேசுறாரு ,

"அது எப்படிங்கய்யா இம்புட்டு பேருக்கு முன்னாடி வாய தொறந்து பேசும் ,அதுக்கு கூச்சமா இருக்காதா ?'

இடையில் பெண் பேசுகிறாள்

" எனக்கு எதுக்கோசரம் கூச்சம் ,சொல்ல வேண்டியத வெளக்கமா சொல்லிடுறேன் ,அந்த பையனுக்கும் எனக்கும் பரிசம் போட்டப்ப ,நான் Wipro ல இருந்தேன் ,இப்ப எனக்கு Microsoft ல வேல கெடச்சிருக்கு ,மாபிள்ள பையன விட எனக்கு 30,000/- ரூபா சம்பளம் அதிகம் ,என் status கும் அவன் status கும் ஒத்து வராது ."

மாப்பிள்ளை அழுவறான் .

"ஐயா போனவாரம் வரையிலும் Coffee shop ல என் கைய புடிச்சிக்கிட்டு தெனமும் கொஞ்சிட்டு இருந்த பொண்ணு ,இன்னைக்கு இந்த மாதிரி பேசுதுயா."

பெண் பேசுறாள் .

" What nonsense,நான் எப்ப உன்கூட Coffee shop க்கு வந்தேன் ,பொய் சொல்லாதே ?"

நாட்டாம வாய தொறக்குறார்.

"என்றா அந்த பொண்ணு உன்கூட Coffee shop க்கு வந்துச்சின்னு சாட்சி இருக்கா ?"

"நான் பாதேன்யா ."

" நீ ஆருக்கு சொந்தம்லே ?"

"பையனோட சித்தப்பாயா ".

"செல்லாது ,செல்லாது ."

"நான் பாத்தேனுங்க ."

" நீ யாருலே ?"

"மாபிள்ளயோட தம்பிங்கயா ?"

"ம்ம்ம்ம் செல்லாது செல்லாது ?"

ஒரு சின்ன பையன் பேசறான் .

"ஐயா நான் பாதேனுங்க்யா ."

"என்ன கண்ணு பாத்தே ?"

" இந்த அக்கா அந்த மாமா கைய புடிச்சி coffee shop க்கு கூட்டிகிட்டு போச்சு ,நான் பொறநாலேயே போயி பாதேன்யா ,ரெண்டு பெரும் coffee ய குடிக்கலையா,ரொம்ப நேரம்மா கைய புடிச்சிக்கிட்டு பேசிகிட்டே இருந்தாங்க ."

" என்றா கண்ணு பேசுனாங்க ".


"இந்த அக்கா மாமாகிட்ட உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ,கண்ணாலம் கட்டிகிட்டா உங்களைதான் கட்டிக்குவேன்னு

சொல்லிச்சியா ,அதுக்கு மாமா சந்தோசமா சிரிச்சாருயா ."

பெண் கத்துகிறாள் .

"பொய் இந்த பையன் பொய் சொல்றான் ."

சிறுவன் தன் cell phone னை எடுக்கிறான்.

"இந்த மாதிரி எதாச்சும் நடக்கும்னுதான்யா நான் எல்லாத்தையும் record பண்ணியிருக்கேன் ."

நாட்டமை cell phone னை வாங்கி பாத்துட்டுயிருக்கிறார் .பெண் தந்தை பேசுறார் .

" ஐயா இப்பெல்லாம் technology ரொம்ப develop ஆயிடிச்சியா ,morphing கீபிங் செஞ்சி ...

நாட்டமை கத்துறார் ,

"நிறுத்தறா .....(நிறுத்தறா ...ருத்றா...தறா...றா.)காலணா சம்பாதிச்சாலும் கக்கூசுக்கு token குடுத்து சம்பாதிச்சவன்டா என்ற பாட்டன் ,என்றா வக்காளி technology,கண்ணாலம்கிறது Coffee shop ல ஆரம்பிச்சி Walmart ல முடியறதுன்னு நெனச்சியா ,மொளைக்கிற நெல்லு பொய் சொல்லும்டா ,சின்ன பையன் கைலயிருக்கிற Cell லு பொய் சொல்லாதுடா .இன்னிக்கு Microsoft ல வேல கெடச்சதுக்கு இந்த பையனோட பொண்டாட்டி ஆகமாட்டேன்னு சொல்றவ ,நாளைக்கு Billgates சோடவெப்பாட்டி ஆகறதுக்கு கட்ன புருஷன் தலையில கள்ளபோடமாட்டான்னு என்றா நிச்சயம் .மானம் பாத்து நிக்கிற பூமிலே நம்ப பூமி ,காத்துல கவுச்சடிச்சாலேயே கை கழுவாம வர்ற கூட்டம்லே இது , technology பத்தி பேசுரானாம் .........

பேச பேச நாட்டாமை ரத்தவாந்தி எடுத்து விழுகிறார் ,கூட்டம் ஓடி வருது.

நாட்டாமை வீட்ல அவங்க பொண்ணு யார்க்கிட்டயோ cell ல பேசிட்டிருக்கு .

" ஒண்ணும் problem இல்லே ரவி ,என்ற அப்பன் வெத்தலையில சுண்ணாம்புக்கு பதிலா வெசத்த தடவிட்டேன் ,அதனால நம்ப marriage ல ஒரு பிரச்சனையும் வராது ."


A Film By,

Mokkapaandi


புதன், 20 ஜூலை, 2011

சினிமாவில் காதல் 2

1990s
பாக்காத காதல்,பாக்குற காதல்,பாக்கப்போற காதல், கேக்காத காதல், கேட்ட காதல், பேசாத காதல்,பேசுற காதல்,........... இப்படி என்னென்ன ஐட்டம் இருக்கோ ,எல்லாத்தையும் பாத்து மண்டைய பிச்சிகிட்டு குத்தாலத்துக்குப் போய் குளிச்சிட்டு வரவங்க இன்னமும் நெறைய பேரு இருக்காங்க.
இந்த பீரியட்லதான் நெறைய foreign மாப்பிள்ளைங்க entry குடுத்தாங்க.ஒன்னு தியாகியா மாறி சேத்துவைப்பாங்க,இல்ல காதலன் கிட்ட செம அடிவாங்கிட்டு கூட இருக்கிற அல்லக்கைய அறைவானுங்க, அதுவும் இல்லேன்னா காதலன குத்தவோ சுடவோ போவாங்க,எதாவது ஒரு செண்டிமெண்டு கிராக்கி நடுவுல வந்து சாவுகிராக்கி ஆயிடும்.
காதலன வாடா,போடான்னு மரியாதையா கூப்பிட ஆரம்பிச்சது இந்த டைம்லதான்.செங்கல் சைஸ்ல இருந்து தீப்பெட்டி சைஸ் வரைக்கும் செல் போன் வந்து பெத்தவங்க வாயில பாலை ஊத்துனதும் இந்த டைம்லதான்.
ஒத்த ரோஜாவ கைல வச்சிகிட்டு பஸ் ஸ்டாப் பஸ் ஸ்டாப்பா இவங்க செஞ்ச ரௌசு இருக்கே,தாங்க முடியலடா சாமி.டக்குனு பாத்தா ஆம்பளையா,பொம்பளையான்னு தெரியாத மாதிரி ஒரு ஹேர் ஸ்டைலு,இவனுக்குன்னு ஒரு மென்டல் பிரெண்டு,போட்டுக்கரதெல்லாம் foreign brand துணிங்க ,பேசறது மட்டும் ரொம்ப பரதேசியாட்டம் பேசுவாங்க.கவிதைங்கிற பேர்ல இவங்க நம்ப கழுத்த அறுத்தத நெனச்ச,............................................................................... சாம்பிள் ஒன்னு பாருங்க,
இதயத்துல இடி,கண்ணுல மழை.
இந்த ஒரு வரிக்காகவே நாப்பது தடவ நானே அந்த படத்த பாத்தேன்,எந்த படம்னா கேக்குறீங்க, வேணாம் விட்டுருங்க.

2000

இது ஒரு சூப்பரான பீரியடுங்க,பொறிக்கிய பாத்தாலும் காதல் வரும்,பேப்பர் பொறுக்கியப் பாத்தாலும் காதல் வரும்,கொலைகாரனைப் பாத்தாலும் காதல் வரும், கொள்ளைக்காரனைப் பாத்தாலும் காதல் வரும்,புதுசு புதுசா நெறையக் கத்துக்குடுத்தாங்க .கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டுக்குத் தெரியாம குடும்பம் நடத்துவாங்க,குடும்பம் நடத்திட்டு வீட்டுக்கு தெரிஞ்சி கல்யாணம் பண்ணிக்குவாங்க.டயலாக் கொஞ்சம் கேப்போமா.
காதலன்: என்னை பிடிச்சிருக்கா?
காதலி: பிடிச்சிருக்கு.
காதலன்: ஏன்?
காதலி: தெரியல?
காதலன்: ஏன் தெரியல?
காதலி: புரியல.
காதலன்: சந்தோசமா இருக்கு.
காதலி: எனக்கும்தான்.
காதலன்: மறக்கமாட்டியே?
காதலி: மாட்டேன்.
ஹலோ எனன? ஒரு நிமிஷம் படிக்கிறதுக்கே உங்களுக்கு கிர்ருன்னு இருந்தா, ரெண்டர மணிநேரம் எங்க நெலமைய யோசனை செஞ்சி பாருங்க.

2010
இத பத்தி சொல்ல ஒன்னும் இல்லங்க,நான் இன்னும் கொஞ்ச நாளாவது ஏதாவது எழுதனும்னு ஆசைப்படுறேன்.

செவ்வாய், 19 ஜூலை, 2011

சினிமாவில் காதல்

1930

ஏதோ ஒரு பூங்கா


காதலன்: கண்ணே....

காதலி: நாதா.....

காதலன்: அமுதூறும் உன் பேச்சும் ,தாலாட்டும் தென்றலும், குளிர்ந்த நிலவும் ,பட்சிகளின் கீதமும்,

நறுமணம் வீசும் மலர்களும் .............ஆஹா ....இப்பொழுது இப்படியே இருந்து விடலாகாதா?

(காதலி நாணத்துடன் சிரிக்கிறாள் ).

(இது டிசண்டா பிட்டு போடுறது ).


1940s

இப்போதும் பூங்காதான்.

காதலன்: அன்பே ........

காதலி: அத்தான் ........

(அப்புறம் ரொம்ப நேரம் பேசிக்க மாட்டாங்க, மூஞ்சிய மூஞ்சிய பாத்துட்டே இருப்பாங்க).

காதலி: அத்தான் எவ்வளவு நேரம்தான் எதுவும் பேசாமல் பார்த்து கொண்டிருப்பாதாக உத்தேசம். காதலன் : மனதோடு மனம் பேசும்போது இதழ் பேச வேண்டுமா ?

காதலி : அப்படியா?

காதலன்: ஆகா, நாணத்தில் உன் கன்னம் ரோஜாவை விட சிவந்துவிட்டதே.....

காதலி: போதும், போதும், உங்கள் எண்ணம் எனக்கு தெரியாது என்று நினைத்து விட்டீரா ...... (பார்க் பெஞ்சை சுற்றி அவள் ஓடுவாள் , உடனே இவரும் பின்னாடியே ஓடுவாரு).

(இது ஒரு வகையான பிட்டு ).


1950s

தென்னம்தோட்டம் மரத்துக்கு ஒரு பக்கம் காதலன் இருப்பான், இன்னொரு பக்கம் காதலி இருப்பாள். கொஞ்ச நேரம் சுத்தி சுத்தி வருவாங்க. அப்புறம் ஓடி பொய் பக்கத்துல இருக்கிற ஆத்தங்கரை மணல்ல உக்காருவாங்க.

காதலன்: ஆனந்தி...

காதலி: சொல்லுங்கள் கண்ணன்....

( இருவரும் கை கோர்த்துகொள்வார்கள்).

காதலன்: இந்த சிவப்பு நிற புடவையில் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா.

(B&W காலத்துல அவங்க சொல்றத வெச்சுத்தான் நமக்கே என்ன கலர்னு தெரியும்). (உடனே காதலி திடீரென்று கண் கலங்குவாள்).

காதலன் : (அவள் முகத்தை தாங்கியவாறு) ஆனந்தி என்ன ஆயிற்று, ஏன் கண் கலங்குகிறாய்?

காதலி : கண்ணன் ... இந்த மகிழ்ச்சி இறுதிவரை நிலைக்கவேண்டுமென நினைத்தே கலங்குகிறேன். (இவரு உடனே அவளை ஆதரவா அணைப்பாரு).

காதலன் : அட அசடே அதற்காகவே அழுகிறாய், இதயத்தின் இறுதி ஓசை வரை, உன்னை என்னிடமிருந்து எவராலும் பிரிக்க இயலாது.

( காதலி காதலின் மார்பில் சாய்ந்து கொள்வாள்).

(இது செண்டிமெண்ட் பிட்டு ).


1960s


மெரீனா பீச்

காதலன்: நிர்மலா ..

காதலி: (பீச் மணலை நோண்டியப்படி) சொல்லுங்க சுந்தர்.

காதலன்: உன் சிநேகிதிங்க எல்லாம் என்னமோ சொன்னதாக சொன்னியே என்ன அது?

காதலி: அதுவா? அவர்களுக்கு என் மேல் பொறாமை.

காதலன்: பொறாமையா? உன் மேல் பொறாமை வருவதற்கு காரணம் என்ன?

காதலி: அதை சொன்னால்தான் உங்களுக்கு தெரியுமா?

காதலன்: சொன்னால்தானே தெரியும்.

(காதலனின் சட்டை மேல் பட்டனை நோண்டுவாள்).

காதலி: உங்களை போன்ற அழகான ஆண்பிள்ளை அவர்களுக்கு கிடைக்கவில்லையே என்றுதான்.

காதலன் : அப்படியா ?

காதலி : (அவன் கன்னத்தை தட்டியவாறு) அப்படிதான் .....

(சொல்லிவிட்டு எழுந்து ஓடுவாள், இவனும் பின்னாலயே ஒரு சைடாக துரத்தியவாறு ஓடுவான்). (இது ஒரு மொக்க பிட்டு).



1970s


அதே மெரீனா பீச்

காதலன்: டார்லிங்

காதலி : சொல்லுங்க டியர்

காதலன்: உட்லண்ட்ஸ்ல பாபி படம் போகலாமா?

காதலி: இன்னைக்கு வேண்டாம், அடுத்த வாரம் போகலாமே

காதலன்: ஏன் ?

காதலி : இன்னைக்கு டாடி நாடக சபாலே அவர் ப்ரெண்டோட மகள் நாட்டிய அரங்கேற்றத்துக்கு என்னை கூட்டிட்டு போறத சொல்லியிருக்கிறார்

. காதலன்: உங்கப்பா சரியான கண்ட்ரியா இருப்பார் போலிருக்கே?

காதலி : (சிணுங்கலுடன்) சுந்தர் டாடிய தப்பா பேசாதிங்க ப்ளீஸ்.

காதலன்: அப்பாவை பத்தி சொன்னா அவ்வளவு கோபம் வருதே. நாளைக்கே நம் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்?

காதலி : வேறென்ன செய்வது அவர் கைகாட்டும் மாப்பிள்ளைகே கழுத்தை நீட்டவேண்டியதுதான்.

காதலன்: அப்பாடா ஒரு வாயாடிகிட்டயிருந்து தப்பிச்சேன்டாப்பா சாமி.

காதலி : என்ன சொன்னீங்க ....

(செல்லமாக காதலன் மார்பில் குத்துவாள், அவன் தடுப்பதை போல் பாவ்லா செய்து கட்டியணைத்து கொள்வான் . மூஞ்சிய மூஞ்சிய தேய்கிற மாதிரி பார்ப்பான் . உதட்டை கடிப்பான், பெருமூச்சு விடுவான் ).

காதலன் : டார்லிங்

காதலி : டியர்

(அப்புறமென்ன மறுபடியும் கொலவெறியோட கட்டிபிடிச்சிக்குவாங்க).

என்ன கன்றாவி பிட்டோ?


1980s


ஐயோ ஐயோ இந்த காலகட்டத்துல காதலை நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருது. காலத்தால் அழியாத கல்வெட்டுல பொறிக்கவேண்டிய காலம் இதுதான். பெல் பாட்டம் பேண்ட்டு , நாய் நாக்கு மாதிரி ஷர்ட்டு காலரு , பரதேசி மாதிரி பரட்ட தல, எமதர்மன் பாச கயிறு மாதிரி பெல்டு, செம காமெடிப்பா . (காதலன் புல்லேட்ல காதலியே வச்சிகிட்டு ஓட்டிட்டு வரான். அவன் வாயிலே சிகரெட்டு. அப்படியே ஒட்டிகிட்டே சந்து, பொந்தெல்லாம் சுத்துறாங்க, அவ அடிக்கடி தன செயினை கடித்தவாறு சிரிச்சிகிட்டே வரா. வழியிலே பூக்காரி கிட்டே பூவாங்கி அவ தலையிலே வச்சு விடுறான், அப்பயும் அவன் வாயிலே சிகரட் இருக்கு . அப்படி இப்படின்னு VGP Golden பீச்சுக்கு வந்து சேந்துட்டாங்க. அங்க புல்வெளியிலே கொஞ்ச நேரம், Gold spot குடிச்சிட்டு கொஞ்ச நேரம் , பீச்சுல கொஞ்ச நேரம் ....முக்கியமான விஷயம் காதலன் வாயில எல்லா சீன்லயும் கண்டிப்பா சிகரட் இருக்கு ...... அப்படியே பீச் ரிசார்ட் பக்கம் வரும்போது மழை வந்துடும். அவன் பன்னிகாச்சல் வந்த மாதிரி நடுங்குவான் ...அவ பன்னியே கடிச்சமாதிரி நடுங்குவாள் ..அப்புறம் மெதுவா காட்டேஜ் உள்ளார போவாங்க .....

(அட போங்கப்பா, இது வரைக்கும் வந்த எந்த சீனுக்கும் வசனம் இருக்காது மியுசிக்தான் ....... Parararabbabaa .....Parararabbabaa.....Rabarabapabappaaa....Rabarabapabappaaa....Thurururutthuthu......Chujumchujumchum.......Chujumchujumchum............) காதுல ரத்தம் வந்தாலும் கடபாறைய எடுத்து சொறிவிக்கலாமுன்னு இருக்கும். )

இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் கடைசியிலே அந்த காதலன் கான்சர் வந்துதான் சாவான்.


இன்னமும் வரும்..............



திங்கள், 18 ஜூலை, 2011

தொலைந்து போனவன்

மானிடர்களே,
அருகே வராதீர்-
விலகிச் செல்லுங்கள்
நான்,
தொலைந்து போனவன்!

கண்ணில் முள் வைத்து,
உதட்டில் விஷமேந்தி,
இதயத்தை இருகூராக்கிய
இவர்களிடமிருந்து,
தொலைந்து போனவன்!

நெஞ்சம் உருக,
கொஞ்சிப் பேசி,
சென்றப்பின்...........
வஞ்சம் தீர்க்க நினைக்கும்
இவர்களிடமிருந்து
தொலைந்து போனவன்!

மயிலிறகாய் வருடிவிட்டு,
மறு நொடியில்,
ஈட்டியால் சொருகிவிட்டு
செல்லும்,
இவர்களிடமிருந்து
தொலைந்து போனவன்!

முன் புறத்தில்,
இதயக் கதவை திறந்து வைத்து,
நுழைந்ததும்,
மரணத்தின் வாசலில்,
தள்ளிவிடும்,
இவர்களிடமிருந்து
தொலைந்து போனவன்!

யானை முட்டைக்கும்,
வெள்ளை காகத்தின் குட்டிக்கும்,
பேரம் பேசும்,
இவர்களிடமிருந்து
தொலைந்து போனவன்!
காகிதக் கப்பல் செய்து,
சிறகிரண்டுக் கட்டி
ஆகாயத்தில் பறக்கவிடும்,
ஜென்மங்கள்
இவர்களிடமிருந்து
தொலைந்து போனவன்,
ஆம்,
தொலைந்து போனவன்தான்.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

எப்படி அழைப்பது ?


..................................................................................................................................
எப்படி உம்மை அழைப்பதென்று
தெரியவில்லை?
மனிதரென்று அழைக்க,
தகுதி இல்லாதவர் நீங்கள்.
மிருகமென்றால்,
அவை என்னை கோபிக்கும்.
அவை,
லஞ்சம் வாங்குவதில்லை.
பரம்பரை சுகம் காண
பாவம் சேர்ப்பதில்லை.
கோபம் வருகிறதா?
கண்கள் சிவக்கிறதா?
அனுதாபப்படுகிறேன்.

மத யானையேறி,
பாரத தேசத்தை
ரத்த சேதம்,
ஆக்கி வரும் உம்மை
என்னவென்று அழைப்பது?
சாதி சண்டையுண்டாக்கி
மண்டை உடைத்து-
சரித்திரம் படைப்பதாக
நாட்டின்,
சோதியை அணைக்கும்
உம்மை,
என்னவென்று அழைப்பது?

போதைப்பொருளில் திளைத்து,
ஆகாயத்தில் பறப்பதாக
நினைத்து,
தரையில் காலூன்ற முடியாத
உம்மை
என்னவென்று அழைப்பது?
காதல் குளத்தில்
மீன் பிடிப்பதாக நினைத்து,
கானல் கடலில்
திமிங்கலமிடம் தொலைந்துபோகும்
உம்மை
என்னவென்று அழைப்பது?
சொல்
என்னவென்று அழைப்பது?
கோபம் வருகிறதா?
கண்கள் சிவக்கிறதா?
அனுதாபப்படுகிறேன்.


வெற்றி நம் கையில்

தோல்வியைக் கண்டுத்,

துவண்டுவிடாதே வாலிபா-

எது தோல்வியென ,

விளக்குவாயா நீ?

வாழ்க்கையின் கண்ணோட்டத்தில்

எதுவுமே தோல்வி இல்லை,

எத்தனையோ எதிர்பார்ப்புகள்,

ஏராளமான ஏமாற்றங்கள்,

ஆனால்,

நீ, நீயாக இருக்கும்வரை

வாழ்க்கையின் ஏமாற்றங்கள்

வெறும் அலையோசை

மட்டுமே...............

ஆர்ப்பரித்தாலும்,

பாறையான உன்

இதயத்தில் பட்டு,

திசைத் தெரியாமல் சிதறிவிடும்.

தடுக்கும் படிகள் எல்லாம்,

உணர்த்தும் பாலங்கள்!

களைந்துவிடு,

உன் இதயத்தை வருத்தும்

விஷ செடிகளைக்

களைந்துவிடு.

வெற்றி விருட்ஷம்மாக

விளைந்துவிடு........

இதயத்தை உறுதிபடுத்து,

வெட்டி பாரத்தை,

வெட்டி எறிந்துவிடு.

தோளின் பாரத்தை உயர்த்து.

பாரத புதல்வனென வலம் வா.

வாழ்கையில் வேட்கைக் கொள்.

வேங்கையாக முன்னேறு.......

வேலையில்லையென இருண்டுவிடாதே,

தட்டியக் கதவெல்லாம் திறக்காது?

கொட்டிய முரசு ஒலிக்காமல் போகாது.

கொட்டுவதற்கு உன்.......

இரு கைகள் இருக்கின்றன,

இரும்பெனக் கொண்டு

உழைத்து வா,

வெற்றி உன் இருக்கையாகிவிடும்.

தொடர்த் தொல்லைகள்

இடர் ஏற்படுத்துவதாய்

எண்ணாதே.......

படமெடுத்து நிற்கும்

உன் நம்பிக்கையின் முன்

அவை,

இடம் தெரியாமல் போகும்.

சுடர் விட்டு ஜொலிக்கும்

ஜோதியாய் தெரிவாய் நீ.

வேலையில்லா வெட்டி பசங்க

" தவமா பெத்த பையன்

தறுதலையா இருக்கானே "-

உள்ளுக்குள்ள அழுவறான் அப்பன்,

ஊர சுத்த காசு கேட்டு

வெக்கமேயில்லாமே கைய ஆட்டிட்டு நிப்பான்.

ஐயோ..........

உருப்புடவேமாட்டான்னா ,

ஒப்பாரி வெக்கிறா அம்மா.

அதெல்லாம் பாத்தா

இருக்கமுடியுமா சும்மா.

வேலைக்கு போகசொல்லி

கேக்குறாளே அக்கா.......

காதுலையே போட்டுக்காம

போட்டுக்கிறான் கலர் கலரா.....

சொக்கா.

நண்பனோட சம்பளம்,

மாசம் மூணு லட்சம்,

வீணா போன காதுல கேட்டும்

இல்லாம போச்சே கூச்சம்.

வெட்டியா சுத்தறவனுக்கு

வெரைட்டி ரைஸ் கேக்குது,

கட்டி வச்சு அடிக்கனும்னு

மனசுதான் துடிக்குது.

சொல்றத சொல்லிட்டேன்,

காத்துவாயன் பாட்டுக்குள்ளே.

புரியாம சுத்துறாங்க

சில பேரு சிட்டிக்குள்ளே.