திங்கள், 26 செப்டம்பர், 2011

ஆளில்லா சாலையில் அவளுடன்......................


நீண்ட நாள் ஆசை
நிறைவேறியது.
ஆளில்லா சாலையில்,
நீயும் நானும்
மட்டும்.......
துளி துளியாய்
தூறல்,
முத்தமிட்டப் போதெல்லாம்......
உன் சிலிர்ப்பு,
இன்னும் என்னை
நெருங்கி.........
இல்லையில்லை,
நெருக்கி
நடக்கிறாய்.......
தூறல் மழையாகக்கூடாதா?
அதோ,
அந்த மேககூட்டம்.....
குடும்பம் குடும்பமாக,
ஊர்வலம் செல்கின்றன......
அதில்,
நான்,நீ,
நம் குழந்தைகள்..........
அடையாளம் காட்டுகிறாய்.
உன் கற்பனையை
நீயே பாராட்டவும்
செய்கிறாய்........

"உங்களைத்தான்
கல்யாணம் செய்துக் 
கொள்வேன் ."
அதை உங்கள்
தாய் மொழியில்
எப்படி சொல்வீர்கள்,
என கேட்கிறாய்.....
சொல்கிறேன்,
சொல்கிறாய்,
தப்புத் தப்பாக........
இருந்தாலும்,
என் மொழியை........
இவ்வளவு இனிமையாக......
என் தாய் 
பேசியும் கேட்டதில்லை....
பேசிய மகிழ்ச்சியில்,
உன் விரல்களை,
கழுத்து குழியில்
வைத்து,
கர்வ பாவனை
செய்கிறாய்.
அத்தனை சேட்டைகளையும்......
மனனம் செய்கிறேன் 
நான். 

"வானவில் வருமா"?
ஆர்வமுடன் கேட்கிறாய்....
"வராது" என்கிறேன்....
"ஏன்?"
ஏமாற்றமடைகிறாய்.
"தன்னை விட
அழகான வானவில்லை
காண அதற்கு
தயக்கம்."
உன் கண்ணை 
பார்த்து சொல்கிறேன்.....
உடனே புரியவில்லை
உனக்கு.......
புரிந்தவுடன்,
பூக்கிறது வெட்கம்........
இரு கைகளால்
உன் முகத்தை மூடி,
தலையை.....
அப்படி
இப்படி
நாட்டியமாட  செய்கிறாய்......
அந்த நொடியை காண
என் உடலெங்கும்.......
கோடி கண்கள் 
தோன்றாதா............

அசிங்கமாக 
தென்பட்டாலும்......
பரவாயில்லை,
ஏங்குகிறேன்.
நான்..........
மீண்டும் மீண்டும்
ஏங்குகிறேன்......

1 கருத்து: