புதன், 21 செப்டம்பர், 2011

வெட்கங்களும், வெட்கப்பட்ட தருணம் அது.


ஒவ்வொரு முறை
உன்னை,
பார்க்கும் போதெல்லாம்.....
புதிதாக பார்ப்பதை
போலவே,
பார்க்கிறேன்.....
ஒவ்வொரு முறை
நீ,
சிரிக்கும் போதெல்லாம்......
புதிதாக பிறந்ததாகவே,
உணர்கிறேன்.
மெல்ல என்
தலைமுடியை,
கோதிவிடுகிறாய்.......
உன் நகத்தினால்,
என் நகங்களை.......
சுத்தம் செய்கிறாய்.
என் சட்டை,
நூலொன்று மேல்
எழுந்து நிற்கிறது,
உன் பற்களால்
கடித்து துப்புகிறாய்......
நான் படும்
அவஸ்தையை,
நான் அறியாமல்
ரசிக்கிறாய்.........
மேலும் மேலும்
உன் செய்கையால்,
என்னை....
ருசிக்கிறாய்.......

அதென்ன?
உன் பார்வைக்கு
அப்படி ஒரு,
சக்தி..........
எரிந்துக்கொண்டே......
குளிருகிறேனே!
அடிக்கடி,
கழுத்திலிருக்கும்
உன் துப்பட்டாவை,
சரி செய்கிறாய்.......
நொடிக்கு நொடி,
என் பார்வையை......
தடுமாற வைக்கிறாய்......
என் பெருமூச்சு,
உன்னை தீண்டும்போது........
கண்ணை மூடி,
பொய்யாக வெட்கப்படுகிறாய்......
அந்த வெட்கசிரிப்பை,
காண.......
சத்தியமாக இந்த 
ஜென்மம் போதாது.......

"கைரேகை பார்க்கதெரியுமா"
திடீரென கேட்கிறாய்...
"தெரியும்"
பொய் சொல்கிறேன்.....
பொய்யென உனக்கும் 
தெரியும்.....
கையை நீட்டுகிறாய்.
மெதுவாக ,
உன் பெருவிரலை.....
மட்டும் தாங்குகிறேன்,
மற்ற விரல்கள்,
என்னை சபிக்கின்றன.
ஏதேதோ உளறுகிறேன்.....
தவமிருந்து கேட்கிறாய்.....
"எத்தனை குழந்தைகள்?"
சிரிக்காமல் கேட்கிறாய்.
"பெண் ரெண்டு,
 ஆண் ஒன்று".
சிரித்தவாறு சொன்னேன்.
"ஏன் ஆண் மட்டும்
 ஒன்று?"
விளக்கம் கேட்கிறாய்.
"அதான் இன்னொன்றாய்
 நான் இருக்கிறேனே".
இதற்காகவே,
காத்திருந்தவள் போல்.......
என்னை,
வாரி அனைத்து........
..............................................
...............................................
.............................................
..............................................
..................................................
வெட்கங்களும்,
வெட்கப்பட்ட தருணம் அது.

1 கருத்து: