ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஏரி அழகாகத் தெரிந்தது.........


காத்திருப்பதும்,
சுகம் என்பதை........
உன்னை காதலித்தப்பின்தான்
தெரிந்துக் கொண்டேன்....
எப்போது வருவாய்?
எப்படி வருவாய்??
யார் துணையுடன் வருவாய்?
என்ன பேசுவாய்?
நான்,
எவ்வாறு உளறுவேன்?
கற்பனை.....
காத்திருப்பு......
உனக்காகத்தான் என்று
நினைக்கும் போது,,,,,,,,,,,,,,,
உள்ளத்தில் 
புரியாத கர்வம்
தோன்றுகிறது........

விரல்களின் இடையில்,
எதற்கு இடைவெளி?
கேனத்தனமாக சிந்திப்பேன்.
உன் விரல்களின்
சந்திப்பு..........
இடைவெளியை 
நிரப்பியப் போது..........
உண்மைத் தெரிந்தது......
"ஐயோ.......இந்த ஏரி
எவ்வளவு அழகா
இருக்கு"
கரையோரம் நின்று
குதூகலப்படுகிறாய்.
உன்னைத் தவிர
வேறெதுவும் எனக்கு
அழகாய்த் தோன்றவில்லை...
உனக்காக,
நானும் குதூகலிக்கிறேன் (நடிக்கிறேன்)...


என்னில் ஒரு
வாட்டம்...........
கண்டுபிடித்த நீ........
காரணம் கேட்கிறாய்......
கேட்ட  நீயே
காரணமும் சொல்கிறாய்.
"மறந்துவிடுவேன்,
உங்களைப்
பிரிந்துவிடுவேன்னு...........
நினைக்கிறீங்களா?"
"அப்படியெல்லாம்
இல்லையே"
பொய் சொல்கிறேன்........
"என்னைப் பாருங்க"?
பார்க்கிறேன்,,,,,,,,,,,,,
அவள் கண்ணில்
ஒரு ஏக்கம்........
இமைகளில் ஒரு
துடிப்பு...........
இதழ்களில் ஒரு
புரட்சி.........
"உங்களை மறக்கனும்கிற
நெனப்பு........
எனக்கு தெரியாம
மனசுக்குள்ள வந்தாலும்.......
அடுத்த நிமிஷம்
நான் இருக்கமாட்டேன்?"
உணர்ச்சி வசப்படுகிறாய்........
உணர்வை கட்டுப்படுத்துகிறேன்.......
திரும்பி பார்க்கிறேன்.........
உண்மையிலேயே அந்த
ஏரி அழகாகத்தான்
தெரிகிறது........................
அவளை விட அல்ல.


1 கருத்து: