சனி, 24 செப்டம்பர், 2011

"வலிக்கிறது"

உனக்கென்ன,
ஒரு வரியில்,
ஆரம்பித்ததை.......
ஒரே வார்த்தையில்,
முடித்து சென்றுவிட்டாய்....
உன்னை,
பொறுத்தவரை.......
வரியிலிருந்து வார்த்தை......
எனக்கோ,
வலி நிறைந்த வாழ்க்கை.
ஆம்,
வலிக்கிறது......
கொடுமையான வலி இது.
"வலிக்கிறது"
இதை படிப்பவர்களுக்கு,
இது ஒரு,
கடந்து செல்லும் சொல்
மட்டுமே........
அனுபவிப்பவனுக்குதான்.......
ஒவ்வொரு வினாடியும்
சித்திரவதையின் உச்சம்.

உன் நிழல்,
விழும் தூரத்தில்
என் மூச்சு காற்று,
வாழ்ந்ததும்,
என் நகம்,
தொடும் தூரத்தில்
உன் நிழல் 
தொடர்ந்ததும்........
பொசுங்கிப் போனதும்
ஏனடி?
என்னுள் எரியும்
மெழுகுவர்த்தி,
உன்னுடன் வாழ்ந்ததை....
வெளிச்சம் போடுகிறது.
எனது தேவை,
இருள் மட்டுமே..........
உன் நினைவுடன்,
உருகி கிடப்பதற்கு.

என்னை,
தவிர்த்ததற்கு.......
ஆயிரம் காரணங்கள்
உனக்கு கிடைக்கலாம்......
நான்,
தவிப்பதற்கு,
ஒரே ஒரு காரணம்
நீ மட்டுமே.
நீண்ட பயணம்......
சேர்ந்து தொடங்கினோம்,
கண்ணிமைக்கும் நேரத்தில்
தனிமையில் நான்.
வந்த பாதை.......
காரிருளில்,
முன் செல்லும் பாதை
முட்புதராய்.....
நான் மட்டும்
நிர்மூலமாய்.

என்றேனும்
ஓர் நாள்......
திரும்பவும் உன்னை,
சந்திக்க நேர்ந்தால்......
உன்னிடம் எதிர்பார்ப்பது...................
....................................................
.....................................................
உன் மன்னிப்பை
மட்டுமே.
என்னை வெறுக்கும்
அளவிற்கு......
நான் இருந்துவிட்டதற்கு,
என்னை மன்னித்தேனென்று......
ஒரு வார்த்தை.....
ஒரே வார்த்தை........
சொல்லிவிடு,
சென்றுவிடு....
போதும்......
நான் புனிதனாகிவிடுவேன்.

2 கருத்துகள்: