சனி, 10 செப்டம்பர், 2011

ஞாபகம் இருக்கிறதா?


ஞாபகம் இருக்கிறதா?
எவ்வித
எதிர்ப்பார்ப்புமின்றி,
எதிர் எதிராக
நீண்ட நேரம்
மௌனமாய் அமர்திருந்தோமே,
நான்கு விழிகளில்
உயிர் பரிமாற்றம்,
நிசப்தமாக
நடந்தேறியதே.........

தானாய் வழிந்த
கண்ணீரை........
தாயாய் மாறி
துடைத்தாயே..........
சேயாய் நீயும்
துடித்தாயே.


ஒருநாள் உன் கனவில்,
வரவில்லை என்றாலும்
மறுநாள்,
என்னை 
கோபித்துகொள்வாயே.
உன் ஜன்னல்
வழியே,
ஓராயிரம் சைகை
பேசி.........
நூறாயிரம் ஆண்டு
காதல் வாழ்ந்தோமே.
நீ
என்னை கடக்கும்
வினாடியில்,
கண்ணிமைக்க நேர்ந்தால்
என்னையே,
சபித்துகொள்வேனே.
என் தேசம்
மட்டும்,
மேற்கு திசையில்
உதயமாகிறது
என்று சொல்வேனே.......
ஞாபகம் இருக்கிறதா?


"காதலனை கண்ணீர்
கடலில்,
மூழ்கடித்துவிட்டு  செல்ல
எப்படி சில
பெண்களால் முடிகிறது?"
அடிக்கடி புலம்புவாயே.
"உனைப் பிரிந்து
வாழ நேர்ந்தால்,
உயிர் பிரிந்து
போவேனே...."
கதை புனைந்தாயே.
"கடைசி மூச்சு
காற்றில் கலந்தாலும்,
உன் பேரை சொல்லி,
திரிந்து கிடக்கும்."
வசனம் பேசினாயே,
ஞாபகம் இருக்கிறதா?

அந்த மலைப்பாதை
ஆளற்ற நடைபாதை,
மௌனம் கிழித்த
நீரோடை......
நம் காதலுக்கு
குடைப் பிடித்த
மழை.........
மெல்ல தீண்டிய
மேகம்......
தீயாய் எரிந்த
தேகம்......
மெல்ல தோள் சாய்ந்து
மெதுவான நடை.
"நீ வேண்டும்"
"நீ வேண்டும்"
திரும்ப திரும்ப
சொன்னாய் நீ.
அந்த கணமே
ஆயுள் முடியாதா
ஏங்கினேன் நான்.
ஞாபகம் இருக்கிறதா?
உனக்கு
ஞாபகம் இருக்கிறதா?






3 கருத்துகள்:

  1. சூப்பர் அப்பு, கலக்கலான கவிதை. அனுபவிச்சு எழுதியதுபோல இருக்கு. வாழ்த்துக்கள். Add follower widget

    பதிலளிநீக்கு
  2. very nice....
    no words to express my feel... as usual...
    Its a god's gift... only some can bring the exact feel in their words. In that case u r gifted gowri.

    பதிலளிநீக்கு