புதன், 31 ஆகஸ்ட், 2011

காதலில் தோல்வியுற்ற காதலர்களுக்கு சமர்ப்பணம்

உறைந்த நிமிடங்கள்...
நிறைந்த நினைவுகள்...
மறைந்த வேதனைகள்...
கறைந்த கண்ணீர்த் துளிகள்...
ஏதோ
ஒரு திசையில்,
இன்னமும்
கண்சிமிட்டி செல்கின்றன.

முன் பொழுது
நீ என்னை,
தேடி வந்ததும்.....
எப்பொழுதும்
சேர்ந்தே இருப்பேன்
என சொன்னதும்.......
கணப்பொழுது.......
நினைத்தாலும்.......
நினைத்தாலும்.......
நினைத்தாலும்.......
வேதனை உணர்ச்சிக்கு.....
சரியான வார்த்தை,
அகராதியில் தேடியும்,
கிடைக்கவில்லை.

கத்தியின்றி,
ரத்தமின்றி,
சாகடிக்கும் கலையை
எங்கே கற்றாய்?
நீ கேட்டால்,
தருவதற்கு
நான் காத்துகொண்டல்லவா
கிடந்தேன்.
பின் ஏன்.....
காதலை விற்றாய்?
நூதன கொலைகாரி
நீ.......
இல்லையில்லை,
கலைகாரி நீ.

காதல் வந்ததுக்கு,
காரணம் சொன்னாய்.......
கையில் காயம் பட்டதற்கு,
காரணம் சொன்னாய்......
காத்திருக்க வைத்தாய்,
காரணம் சொன்னாய்......
எடை குறைந்ததற்கு,
காரணம் சொன்னாய்.......
அடிக்கடி கோயில் செல்வதற்கு,
காரணம் சொன்னாய்.....
மறதிக்கு திட்டு வாங்கியதற்கு
காரணம் சொன்னாய்.....
தம்பி பிறந்தநாளுக்கு
வாழ்த்து சொல்ல மறந்ததற்கு,
காரணம் சொன்னாய்......
சாப்பிட பிடிக்கவில்லைஎன்பதற்கு
காரணம் சொன்னாய்.......
உன்னையறியாமல் அழுவதற்கு,
காரணம் சொன்னாய்....
அதற்கு காரணம் சொன்னாய்,
இதற்கு காரணம் சொன்னாய்,
பிரிந்துவிடலாம் என்பதற்கு
மட்டும்,
ஒரு காரணம் கூட,
சொல்லாமல் சென்றுவிட்டாய்...
நீ,
சென்றேவிட்டாய்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

எனக்கே எனக்காக ஒரு தோழி


எனக்கொரு
தோழி,
எனக்கு மட்டும்
அவள் தோழி.
கள்ளம் இல்லா
பேச்சால்,
என் உள்ளம்
நிறைந்தவள்.....
இடிந்த சுவரில்
வண்ணம்
வரைந்தவள்..
நிறைய பேசுவாள்...
நிறைவாக பேசுவாள்...

நேற்றைய மழையில்
முளைத்த காளான்
அல்ல அவள்...
கால சுழலில்,
என் கரை
ஒதுங்கிய 
கலன் அவள்....
தங்க பதுமை 
அவள்...
பெண் இனத்தில்
புதுமை அவள்.
கொஞ்சம் கோபப்படுவாள்..
கொஞ்சம் வெட்கப்படுவாள்..
கொஞ்சம் வேதனைப்படுவாள்...
கொஞ்சம் சிணுங்குவாள்...
கொஞ்ச,கொஞ்ச.....
குழந்தையாவாள்.

என்னுள் விழுந்த 
துளி அவள்.
முத்தாக பாதுகாக்கிறேன்...
என் மழைக்காலம்,
அவள் கிளையில்
கடந்து செல்லும்...
என் வெயில்காலம்,
அவள் குடையில்
நகர்ந்து  செல்லும்..
இன்னும் சொல்ல
முடியா வார்த்தைகள்
முடிவு பெறாமல்
காற்றோடு கரைந்து
செல்லும்.....

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

அந்த நாள்,அந்த நிமிடம்,அந்த நொடி..........

நானும் என் மனைவியும் அறையை சுத்தம் செஞ்சப்போ,என் பழைய Diary கெடச்சது, எடுத்து பாத்தா ,ஆகா ........உச்சக்கட்ட சோகத்துல நான் கிறுக்கியது எல்லாம் அதுல இருந்திச்சி.இன்றைய தேவ(லூசு)தாசுங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.



உன்னை சந்தித்த,
அந்த நாள்......
அந்த உணர்வு.....
அந்த பகிர்வு.......
நீ மட்டுமே,
எனக்கானவள்
என,
முடிவான தருணம்.
எல்லாமே,
ஒரு நிகழ்வாக
நிகழ்ந்தது.
கனவாக முடிந்தது.

நீ
கிடைத்தது மிக,
அரிது.
அதனால்தான்,
என் காதல்,
எனக்கு மிக மிக
பெரிது..............
என நினைத்தேன்.
நம் சந்திப்பு,
நிகழ்ந்திருக்காவிட்டால்,
என் காதலும்,
நிராகரிக்கப்பட்டிருக்காது.
அழுவதால்,
நீ வரப்போவதுமில்லை.
திரும்ப,
என்னை தரப்போவதுமில்லை.

காற்றில் கரைந்த,
நம் வார்த்தைகள்,
என்,
சுவாசத்திலும் அல்லவா
நுழைந்துவிட்டன.
வெளிவரத்தெரியாமல்,
இதயத்தில் எதிரொலித்து,
என்னை.......
சுக்குநூறாக்குவதை,
நீ,
உணரமாட்டாய்.
உணர தேவையில்லை.
இந்த,
நரக வேதனையை,
நான் ரசித்து
அனுபவிக்கிறேன்.
ஏனென்றால்,
அது ஞாபகப்படுத்துவது
உன்னையல்லவா.

கடந்த காலம்,
திரும்ப நிகழ்ந்தால்......
உன் புரிதலுக்கு
உடையவனாக இருப்பேன்.
இல்லையென்றால்,
உன்னை மறுத்திருப்பேன்.
இப்படி 
என்னையே வெறுத்திருக்கமாட்டேன்.
உன்னில்
தொலைந்த என்னை,
தேடிக்கொண்டிருக்கவும் மாட்டேன்.

என்னவாயிற்று
இவனுக்கு?
ஏன்
இப்படி திரிகிறான்?
பெற்றோர் கலக்கம்,
கண்களுக்கு தெரிகிறது.
இதயத்துக்கு புரியவில்லை.
இருந்தால்தானே
புரியும்.
அது உன்னிடமும்
இல்லை.
தூக்கி எறிந்த
நீ,
நிம்மதியாக
உறங்கி கொண்டிருப்பாய்.
தூர விழுந்த
அது,
எங்கேனும் இருளில்
உன் பேர் சொல்லி,
பிதற்றிக்கொண்டிருக்கும்.

ஒரு
பனி காலத்தில்,
கரம் கோர்த்தவாறு-
நீண்ட தூரம் நடந்த
அந்த நாள்,
என் தோள் சாய்ந்த
அந்த நேரம்,
உன் மடி தூங்கிய
அந்த நிமிடம்,
நீ கண்ணீர் சிந்திய
அந்த நொடி...........
கடவுளே 
போதும்..........
அது போதும்.........
கல்லறையில்,
மூடிய போதும்.........
கண்ணிமைக்குள்......
அந்த இடங்கள்
சொர்க்கமென காட்சியளிக்கும்.


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

சுதந்திர தின Special

நான் சொல்வேனடா.......
நான்கு தலைமுறைக்கு,
சொத்து சேர்க்க-
நன்றி கெட்ட பிண்டமாக,
நாட்டில் பவனி வரும்
மாமிசமே.........
நாளைய நாளில்
நாடி அடங்கி,
நாறி கிடக்கும் வேளையிலே......
நரகத்தின் கட்டில்,
நடனமாடியவாறு
உன்னை வரவேற்க
காத்திருக்கும்,
என
நான் சொல்வேனடா.

எத்தனை பேர் கண்ணீர்.........
அத்தனையும் உன்
சந்ததியினருக்கு.........
நீ சேர்க்கும்
பாவ மூட்டைகள்.
கண்ணில் படுவதையெல்லாம்
களவாட துடிக்கும்
நீ,
மண்ணில் புதைந்தபோது
புழுவாட கிடப்பாய்,
என,
நான் சொல்வேனடா.......

ரத்தம் சிந்தி,
சுத்தம் செய்த நாட்டை,
உம் போன்ற,
எச்சில் கையில்
சீரழிய விடுவோமா?
அங்கே பாரடா........
பித்தம் தெளிந்த
எம் மக்கள்,
நாத்தம் பிடித்த
வல்லூறு உம்மை,
கொத்தி குதற
வேங்கை என சீறி
வருகிறார்கள்,
என,
நான் சொல்வேனடா......

உத்தமர் வாங்கிய
சுதந்திரம்,
தரித்திரர் கையில்,
சிக்கி கிடக்கும்
அவலத்தை,
என்னவென்று சொல்வது?
கொள்ளை அடிக்கும்
திருடர் உம்மை,
கொல்லையில் கிடத்தும்
நாள்,
வெகு தொலைவில் இல்லை
என,
நான் சொல்வேனடா......

என் இளைஞன்,
தூங்குவதாக நினைத்து,
ஜனநாயகத்தை,
தூக்கிலிடும் ஜந்துகளே,
கண்ணிமைக்கும் நேரத்தில்,
உம்மை நாற்சந்தியில்
நார் நாராக கிழித்து,
தொங்கவிடும் காலம்,
இதோ,
என் கண்ணில் தெரிகிறது
என 
நான் சொல்வேனடா.....
உறக்கத்திலும் சொல்வேனடா.....
உரக்க சொல்வேனடா.

சனி, 13 ஆகஸ்ட், 2011

ஒரு (உண்மையான)காதல் கதை.......


அந்த பைக் சுமாராக 80 லிருந்து 100 கிமீ வேகத்தில் மலைப்பாதையில் இறங்கி கொண்டிருக்கிறது.
அவள்: hey மெதுவா போ எனக்கு பயமா இருக்கு.
அவன்:cool, எல்லாம் ஒரு ஜாலிக்குதான்.
அவள்: இதுக்கு பேர் ஜாலியா?எனக்கு ரொம்ப பயமா இருக்கு.
அவன்: அப்ப i love you ன்னு சொல்லு.
அவள்:  i love you
அவன்: கேக்கலை.
அவள்: (சத்தமாக) i love u.இப்பயாவது வண்டியை slow வா ஓட்டு.
அவன்: சரி என்னை இருக்கமா கட்டிபிடி.
 (இறுக்கமாக கட்டிக் கொள்கிறாள்).
அவன்: என் helmet டை எடுத்து நீ மாட்டிக்கிறியா? ரொம்ப uneasy யா இருக்கு?

(அடுத்த நாள் காலை newspaper ரில் ஒரு ஓர செய்தி.Two wheeler brake பிடிக்காத காரணத்தினால் மலை பாதையில் விபத்து.பயணம் செய்த இருவரில் ஒருவர் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.லேசான காயங்களுடன் இளம்பெண் ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.)
  கொஞ்சம் பொறுங்க ஒரு முக்கியமான உண்மைய தெரிஞ்சிக்க வேணாமா.
வண்டி brake பிடிக்காத உண்மை பாதி தூரத்திலேயே அவனுக்கு தெரியும்.அவளிடம் அவன் அதை சொல்லவில்லை.மாறாக அவள் அவனை காதலிப்பதையும் ,கட்டியணைப்பதையும் நிறைவேற்றிக்கொண்டு தன் helmet டை அவள் அணிய செய்தான்.ஒரு வேளை அவனுக்கு ஏதேனும் நேர்ந்தாலும்,தன் காதலிக்கு எதுவும் நேரக்கூடாது என நினைத்து அப்படி செய்தான்.
     இப்ப அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சிங்க, Foreign ல settle ஆயிடிச்சு.அதுக்கு நாலு வயசுல ஒரு பையன் இருப்பதாகவும், அவனுக்கு தன் காதலன் பெயர் வைத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். 

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

காதல் மன்னிப்பு



உன்னை எனக்கு
மிகவும் பிடித்தது,
அதனால் என்னை
மன்னித்துவிடு.
என்னை பிடித்தும்,
பிறகு பிடிக்காமல் போன
உன்னையும்,
மன்னித்து விட்டேன்.

உன்னை தொலைத்து
விட்டேன்.
அதனால் என்னை
மன்னித்துவிடு.
தொலைவதற்காகவேக் காத்திருந்த,
உன்னையும்,
மன்னித்துவிட்டேன்.

உன் பெயர்
சொல்லியே,
இதயம் துடித்தது.
என்னை மன்னித்துவிடு.
உன் காதில்
விழுந்தும்,
கசக்கியெறிந்த
உன்னையும்,
மன்னித்துவிட்டேன்.

உனக்கு பிடித்த
விளையாட்டெல்லாம்,
எனக்கும் பிடித்தது.
என்னை மன்னித்துவிடு.
என் உணர்வோடு
விளையாடி சென்ற,
உன்னையும்,
மன்னித்துவிட்டேன்.

உன்னை தலையில்
கிரீடம் என-
வைத்து கொண்டாடினேன்.
என்னை மன்னித்துவிடு.
குப்பையில்,
வீசி சென்ற
உன்னையும்,
மன்னித்துவிட்டேன்.

உன்னை நினைத்து,
கனவுகளும்,
இலட்சியங்களும்,
சேமித்திருந்தேன்.
என்னை மன்னித்துவிடு.
ஒரு வினாடியில்,
பொசுக்கி சென்ற
உன்னையும்,
மன்னித்துவிட்டேன்.

உன்னை எண்ணி,
தெரு தெருவாக-
பைத்தியம் போல்
திரிந்திருக்கிறேன்.
என்னை மன்னித்துவிடு.
எல்லாம் தெரிந்தும்,
அமைதியாகவே,
இருந்துவிட்ட,
உன்னையும்,
மன்னித்துவிட்டேன்.

என் கண்ணாடி
சுவர் முழுவதும்,
உன் பெயரையே,
கிறுக்கியிருந்தேன்.
என்னை மன்னித்துவிடு.
கண்ணிமைக்கும் பொழுதில்,
நொறுக்கி சென்ற,
கிறுக்கி,
உன்னையும் மன்னித்துவிட்டேன்.

கடைசியாக,
காலமெல்லாம் உன்னுடன்,
வாழ நினைத்தேன்.
என்னை மன்னித்துவிடு.
காலமே அழிந்தாலும்,
என் திசை வர-
வெறுத்த,
உன்னையும் மன்னித்துவிட்டேன்.
மன்னித்துவிடு.
மன்னித்துவிட்டேன்.