பிறிதொரு நாள்,
பிரிந்த ஒரு நாள்.....
மீண்டும்
அந்த கோயிலுக்கு
சென்றிருந்தேன்.
நான் மட்டும்.....
கல்லாய் நின்ற
தெய்வம்......
இன்னமும்,
கண் திறந்து
சிரித்துக் கொண்டிருக்கிறார்.
நீ கேட்டால்
உடனே வரம் தரவேண்டுமா....
அந்த பார்வை
எனக்கு சொல்லிற்று.
யார் சொல்லி
அவருக்கும் தெரிந்தது,
கானலாய் போன
என் காதல்.
வணங்க தோன்றவில்லை...
முனகி விட்டு
திரும்பினேன்.
அந்த மரம்
கண்ணில் பட்டது.....
பெருகிய கண்ணீர்
என்னை
மேலும் சுட்டது.
நான் விரும்பாதபோதும்
என் கால்கள்,
சூன்யம் வைத்ததை போல்
எனை இழுத்து
சென்றன....
நின்றன.
தரைமேல் எழும்பி.....
கிளைபரப்பிய வேர்கள்....
அமர்கிறேன்.
இங்குதானே......
என் விரலுக்கு
சொடுக்கெடுத்தாய்.
காற்றில் உனை
தேடும் விரல்கள்......
காணாமல்,
கதறி அழுவதை
நன்கு உணர்கிறேனடி..
என்னவாயிற்று எனக்கு?
ஏன் இன்னமும்
இங்கு அலைகிறேன்.
நீ இல்லை.....
என்பதை இதயம்
ஒவ்வொரு துடிப்பினில்
உணர்த்தினாலும்......
வருவாயா?
வருவாயா?
என.......
விழிகள்
விக்கித்து நிற்கின்றன.
அடிவயிற்றில் அலையும்
அமில பந்துகள்,
என்
உயிர் மூச்சை
நிறுத்த துடிக்கின்றன.
இந்த
கொடும்வலியிலிருந்து......
விமோசனமே
கிடையாதடி......
உன்னை
மறக்கவும்
முடியாதடி.